1. மனதை மாற்றிவிட்டாய்
"கோபமே குணமாக கொண்ட நாயகனும்,
குழந்தை போல் குறும்புத்தனமே குணமாக கொண்ட நாயகியும் குடும்ப வாழ்வில்
இணைவதும், நேர் எதிர் துருவங்களான இவ்விருவரில் யாருக்காக யார் மனதை
மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்பதே எனது முதல் கதையான இந்த "மனதை
மாற்றிவிட்டாய்" கதையின் சுருக்கம்.
2. என்னை உன்னுள் கண்டெடுத்தேன்
உறவுகள் இருப்பினும் ஏமாற்றம், குழப்பம் என அன்பிற்கு அடங்கி தன் சுயத்தை இழந்து அனைவரையும் வெறுக்கும் நிலையில் தனித்து வாழும் நாயகன். உறவுகளை இழந்தாலும் அன்பையே ஆதாரமாக கொண்டு மகிழ்ச்சியாக வாழும் நாயகி. விஷமென நினைத்து அவளை விட்டு விலக, பின் மருந்தென அவளே மனதில் பதிய அவனின் சுயத்தையும், மகிழ்ச்சியையும் மீட்டு தருவாளா அவள்? என்பதே இந்த கதை "என்னை உன்னுள் கண்டெடுத்தேன்".

No comments:
Post a Comment